இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!
- Reporter 21
- 05 Apr, 2024
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜோ பைடன் கூறியதாவது, காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
காசாவில் உள்ள பாலஸ்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், அமெரிக்கா தனது கொள்கையை மாற்றிக் கொள்ளும்
பொதுமக்களை பாதுகாக்க இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கை பொறுத்தே இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் கொள்கை இனி தீர்மானிக்கப்படும். என்று நெதன்யாகுவிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *